கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1861

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 02பேர் இன்றைய தினம் பதிவாகியுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1861 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த இருவரில் ஒருவர் கட்டார் இலிருந்து நாடு திரும்பிய நிலையில், பலகஹதென்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என்றும் மற்றையவர் மும்பை இலிருந்து நாடு திரும்பிய நிலையில் தியத்தலாவ தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.