கொரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரேநாளில் 133 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த 24 மணித்தியாளத்தில் 133 உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,883 இல் இருந்து 7,375 ஆக உயர்ந்துள்ளது.