கொரோனா வைரஸ் – ஒரே நாளில் 24 பேர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 96 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.