(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைகளை நாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.