மனித கொலையுடன் தொடர்புடைய ஒருவர் கைது…

மதுகம, யட்டதொலவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது குறித்த சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உட்பட அருவாள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.