கொல்கத்தா விமான நிலையம் இன்று(03) மூடப்படுகின்றது..

(FASTNEWS | COLOMBO) – ‘போனி’ (FANI’) சூறாவளி காரணமாக கொல்கத்தா நெடாஜி, சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒடீஷா தலை நகரமான பூபநேஷ்வரன் விமான நிலையங்களை இன்று(03) காலை 09.30 முதல் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிந்தியாவில் சுமார் 200 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சூறாவளியானது பங்களாதேஷ் நோக்கி பயணமாக சாத்தியங்கள் நிலவுவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.