கொள்ளுப்பிட்டி : 55 கொரோனா தொற்றாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்பட்டுள்ளதுடன், மொத்தமாக கொழும்பில் 251 தொற்றாளர்கள் நேற்று(10) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில்;

புளுமென்டல்-4

பொரள்ளை-5

தெமட்டகொட-17

கிரான்பாஸ்-32

கெசல்வத்த-25

கிருலப்பனை-4

கொள்ளுப்பிட்டிய-55

வெல்லம்பிட்டிய-1

மாளிகாவத்த-20

தெஹிவளை-1

கொட்டாஞ்சேனை-11

மருதானை-20

மட்டக்குளிய-8

மிரிஹான-1

கொலன்னாவை-7

முகத்துவாரம்-4

கல்கிஸை-7 மற்றும் கோட்டை பிரதேசத்தில் 28 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.