கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நாளை(20) இரவு 9.00 மணி முதல் 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.
களனி பாலத்தில் இருந்து தெமட்டகொட வரையான பேஸ்லைன் வீதி பகுதி, கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.
இதேவேளை, புறக்கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.