கொழும்பின் பல பகுதிகளில் நாளை(24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொம்பனி வீதி (கொழும்பு – 2), கொள்ளுப்பிட்டி, பொரல்லை, மருதானை அண்டிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மேலும், நாளை இரவு 10 மணி முதல் 18 மணித்தியலாங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.