(FASTNEWS|COLOMBO) – கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று(26) காலை 9 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கிழக்குப் பிராந்தியத்தின் குடிநீர் செயற்றிட்டத்திற்கான குழாய் கட்டமைப்பை விருத்தி செய்வதற்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.