கொழும்பில் அமையப் பெற்றுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தீப்பரவல்…

கொழும்பு – ரோஸ்மித் பிளேஸில் அமையப் பெற்றுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீப்பரவல் ஆனது தற்போது, தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு துறையின் திணைக்களம் இது குறித்து தெரிவிக்கையில், இன்று(05) காலை சுமார் 4.30 மணியளவில் குறித்த தீப்பரவல் பரவியதாக அறியக்கிடைத்ததை அடுத்து நீர் பாய்சும் பவுசர் உடன் தீயணைக்கும் வாகனம் ஒன்று அனுப்பப்பட்டதாக தெரிவித்திருந்தது.

மின்சார ஒழுக்கு காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு, குறித்த ஆடையகம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் உயிர் பலிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

rishma