கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தும் ஞாயிறன்று மூடப்படும்…

கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தும் எதிர்வரும் 19ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மூடப்பட்டு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.