கொழும்பில் சில பகுதிகளுக்கு 18 மணி நேர நீர் வெட்டு…

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பாகங்களில் இன்று(24) காலை 08.00 மணி முதல் நாளை(25) வரை 18 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவலை முதலான மாநகர சபை பகுதிகளிலும், மஹரகமை பொரலெஸ்கமுவை மற்றும் கொலன்னாவை நகர சபை எல்லைக்கு உற்பட்ட பகுதிகளிலும், கொட்டிக்காவத்தை –முல்லேரியா பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், இரத்மலானை மற்றும் செய்சாபுர பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.