கொழும்பு நகர சபை எல்லைக்குள் குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படும் நீர், இன்று(09) இரவு 7.00 மணியளவில் வழமைக்கு திரும்பும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பில் இடம்பெற்று வரும் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுகிறது.