கொழும்பில் 18 மணித்தியால நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு 13,14,15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மறுதினம்(19) இரவு 09 மணி முதல் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கோட்டை,புறக்கோட்டை மற்றும் கொழும்பு 09 உள்ளிட்ட பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தபணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.