திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இன்று 9 மணித்தியாலங்களிற்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று(07) காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு – 5 மற்றும் கோட்டை மாநகர சபை பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், கொழும்பு – 4, 6,7,8 ஆகிய பகுதிகளிலும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.