(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – கோட்டை பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் இன்று(09) அதிகாலை 12.40 அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசார் இணைந்து தீ பரவலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீவிபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.