(FASTNEWS|COLOMBO) – கொழும்பு உள்ளிட்ட நாட்டில் பரவலாக விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளர் அலுவலகம் மற்றும் கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டல் வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பது தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் முடிந்தளவு நிறுவனங்களுக்கு உள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசேடமாக கொழும்பின் பிரதான இடங்கள் சிலவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.