கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பு – கண்டி வீதியின் வரக்காபொல பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகன ஓட்டுனர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பாடசாலை விடுமுறை மற்றும் பண்டிகை காலம் காரணமாக ஏனைய நாட்களைவிட அதிகளவான வாகனங்கள் இக்காலப்பகுதியில் வரக்காலபொல நகரம் ஊடாக பயணிப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.