காலி முகத்திடலிலிருந்து மொரட்டுவை வரையிலான காலி வீதியில் அதிக வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கராப்பிட்டிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் இடம்பெறுகின்ற நடைபவணி இன்று(26) காலை 6 மணி முதல் அந்த வீதியால் பயணிக்கவுள்ளது.
இதன் காரணமாக அந்த வீதியில் காலை வேளையில் அதிக வாகன நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காகவே பொலிசார் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளனர்.