கொழும்பு – குளியாப்பிட்டிய நோக்கி பயணிக்கும் சாரதிகள் கவனத்திற்கு 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் கனமழையின் காரணமாக கொழும்பு – குளியாப்பிட்டிய பிரதான வீதியின் நாத்தாண்டிய பழைய வீதி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதியில் பேரூந்துகளுக்கு மட்டுமே தற்போது பயணிக்க முடிவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிசார் சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.