கொழும்பு கோட்டையில் இருந்து தலை மன்னார் வரையிலான புகையிரத சேவைகள் இன்று(17) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய குறித்த சேவைகள் மதவாச்சி வரையில் மாத்திரமே இடம்பெறும் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரத வீதியில் மதவாச்சி மற்றும் செட்டிக்குளத்திற்கு இடையில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகளின் நிமிர்த்தமே இவ்வாறு புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.