(FASTGOSSIP| COLOMBO) – கொழும்பு பிரதேசத்தில் நிலவும் வீதி நெரிசல்களை குறைக்கும் நோக்கில் கொழும்பு – கோட்டை முதல் யூனியன் பிளேஸ் வரையில் படகு சேவை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட மக்கள் படகு சேவையின் முதல் கண்காணிப்பு சுற்றுப்பயணம் மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த படகு சேவையின் மூலம் கொழும்பு – கோட்டை முதல் யூனியன் பிளேஸ் வரையில் 15நிமிடங்களில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

