கொழும்பு ஜம்பட்டா வீதி துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழப்பு…

)கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் நேற்றிரவு(08) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ஜம்பட்டா வீதி பகுதியில் இரு குழுக்களுக்குள் இடம்பெற்ற முரண்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.