கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம்

கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டு துணை மின் இணைப்பு நிலைங்களில் இருந்து கொழும்பு நகருக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் நிலத்தடி மின்சார கேபிள்கள் செயலிழந்துள்ளதே இதற்கு காரணம் என ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.