கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட கோரிக்கை…

நாரஹேன்பிட்டியில் இருந்து நாவல வீதி, நுகேகொடை – பாகொட வீதி, நுகேகொடையில் இருந்து ஹய்லெவல் வீதி மற்றும் பாராளுமன்ற வீதி ஊடாகவும் கொழும்பிற்கு நுழையும் வீதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று(03) ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளமையாலேயே குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பை நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.