(FASTNEWS|COLOMBO) பெலியத்தயிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம், பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
புகையிரதத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த புகையிரதம், திடீரென நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்காரணமாக, கரையோர புகையிரத மார்க்கத்தினூடான புகையிரத சேவை தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.