கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை(09) பிற்பகல் 2 மணி தொடக்கம் 15 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என நீர்விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர பிரதான வீதி, ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான அனைத்து உப பாதைகளிலும் நீர்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.