கொழும்பு – பெலியத்த புகையிரத சேவை…

அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் கொழும்பு தொடக்கம் பெலியத்த வரையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத்தறை பெலியத்தரயில் பாதையின் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருப்பதாக புகையிரத பொதுமுகாமையாளர் டிலந்தபெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் கொழும்பு தொடக்கம் பெலியத்த வரையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.