கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல்.

கோட்டை, ரயில் நிலையத்துக்கு முன்னால் ஊனமுற்ற இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்களுக்கான ஓய்வூதியத்தை வழங்குமாறு அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம், நேற்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.