கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா’வுக்கு கட்டாய விடுமுறை..

கொழும்பு மாவட்ட நீதவான் அயேசா ஆப்தீனுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று(24) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீதவானுக்கு இவ்வாறு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை சந்திக்க வெலிக்கடை சிறைசாலைக்கு சென்றமையே கட்டாய விடுமுறை வழங்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசரணைகளை நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.