மோதரை – முத்துவெல்ல பிரதேச துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி…

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

+++++++++++++++++++++++++++++(update 02.40)

கொழும்பு – மோதரை பகுதியில் துப்பாக்கிச்சூடு….

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) மதியம் 12.50 மணியளவில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபால பிள்ளை பாலசந்திரன் என்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.