(FASTNEWS|COLOMBO) – யட்டியாந்தோட்டை பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் கொழும்பு – ஹட்டன் ஏ-7 வீதியின் போக்குவரத்து நடவடிக்கை இன்று(11) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனவே அந்த வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதியாக பழைய கொழும்பு – ஹட்டன் வீதியின் ஊடாக யட்டியாந்தோட்டை நகரின் மணிகூண்டு கோபுரத்திற்கு அருகில் மற்றும் விகாரைக்கு அருகில் சமன் சிலை வரையும் பயணித்து பிரதான வீதிக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழிறக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் சீரமைக்கு பணிகள் மேற்கொள்வதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.