கோடாபயவின் ஜனாதிபதிக் கனவுக்கு அமெரிக்கத் தூதரகம் தடை..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ போட்டியிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கை ஒன்றில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகமவைச் சந்தித்த அமெரிக்க தூதரக அதிகாரிகள்,
கோடாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்படும் நடவடிக்கைகள், வெள்ளைக்கொடி சம்பவம், அதாவது விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான நடவடிக்கைகளை கோடாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தினாரா என்பது குறித்து தெரிந்து கொள்வதிலும் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக குறித்த தகவல்களில் கூறப்பட்டுள்ளது.