கோட்டபாய இன்று இலங்கை திரும்பிய நிலையில்.. கைது செய்ய அனைத்தும் தயார் நிலையில்…?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கோட்டபாய ராஜபக்ஷவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய திட்டம் இட்டிருந்த நிலையில் அவர் தற்போது நாட்டுக்கு வருகை தந்துள்ளதால் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பண ஊழல்கள் குறித்த விசாரணைக்குப் பின்னரே அவர் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(rizmira)