கோட்டாபயவிற்கு சங்கக்கார எவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க கூடிய அரசியல் கட்சி, குடும்பம் என்பவற்றுக்கு அப்பால் புதிய வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்ததென புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அனைத்து இலங்கையர்களையும் உண்மையாக ஒன்றிணைக்கும் பார்வையும், வல்லமையும் பெற வாழ்த்துகிறேன்.நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பு, செழிப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.