கோட்டாபயவுக்கு முரளி ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்மக அமைப்பின் கலந்துரையாடல் எதிர்வரும் 08ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 08ம் திகதி கொழும்பு ஷங்கிரிலா விடுதியில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.