(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 69 இலட்ச மக்களும் சோறு தின்னும் மாடுகள் என சமகி ஜன பலவேகய வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
சமகி ஜன பலவேகய தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேலை தெரிந்த வீரர் என்ற தொனியில் நாட்டினை கைப்பற்றியிருந்தாலும், அவருக்கு கீழ் நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையும் ஆரம்பித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை தேர்தலை ஒத்திவைக்குமாறு எவ்வளவு கூறினோம். மேலும் அதையே நாம் கோருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.