(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கிய கட்சிகள் சில எதிர்வரும் பொது தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என எதிர்பார்த்து காத்திருந்த குறித்த மலையக அரசியல் தலைவருக்கு, தற்போது பெரும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவர் சஜித் அணியில் இணைய முயற்சித்துவருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான பேச்சு வார்த்தைகளில் கொழும்பின் பிரதான வர்த்தகர் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.