(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா குடியுரிமையினை இரத்து செய்தமை தொடர்பிலான அனைத்து சான்றிதழ்களையும் தனக்கு முன்வைத்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாளில் கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் சிலருடன் வந்து குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.