கோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரத சேவையில் தாமதம்…

அம்பேபுஸ்ஸ அருகில் பதுளையில் இருந்து வரும் இரவு நேர புகையிரதத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாக பயணிப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றனது.

இன்று(18) காலை முதல் இவ்வாறு புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டு வந்ததாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் காலை 9 மணியாகும் போது பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.