கோட்டை புகையிர நிலையத்தில் குண்டு என பொலிசாருக்கு அழைப்பு விடுத்த யுவதி கைது..

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு, கடந்த 27ஆம் திகதியன்று புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் குண்டு இருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியினை இன்று (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தை பிரதேசத்தினை சேர்ந்த குறித்த யுவதியானது காதலனுடன் ஏற்பட்ட முறுகலினாலேயே நடைபெற்றதொன்று என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதியானவள் இன்று (04) நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளார்.