கோதுமை மா -அமைச்சர் மங்கள விசேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

பிரிமா கோதுமை மாவின் விலை நேற்று (14) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.