கோப் அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு..

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு குறித்த பணிப்புரையை பிரதமர் விடுத்துள்ளார்.

இந்நிலையில் கோப் குழுவின் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபர் அராய்ந்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.