இலங்கை கோல் மண்டலம் நாளை(04) முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சகம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, மாணவர்கள் மத்தியில் வானியல் குறித்த அறிவை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நாளை(04) காலை, வருகைத்தரும் மாணவர்களுக்காக, வானிலை நிபுணர் பேராசிரியர் சந்தன ஜயரத்தன சிறப்பு விரிவுரை ஒன்றையும் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.