க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்…

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

எல்லை நிர்ணயம் மற்றும் தேர்தல் முறை திருத்தம் என்பனவற்றை முன்னிறுத்தி கடந்த காலத்தில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த காரணிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முடிந்தளவு விரைவாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)