சகல கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும் பலத்த பாதுகாப்பு – ரஞ்சித் மல்கம் ஆண்டகைக்கு, குண்டு துளைக்கா கார்கள்..

(FASTGOSSIP | COLOMBO) – பேராயர் கர்தினால் ரஞ்சித் மல்கம் ஆண்டகை உள்ளிட்ட சகல கத்தோலிக்க மதத் தலைவர்களினதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற் கொண்டு ரஞ்சித் மல்கம் ஆண்டகைக்கு, பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கார்கள் இரண்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.