சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் அடையாள சேவைப்புறக்கணிப்பில்…

சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்று(08) அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தியே குறித்த இந்த அடையாள சேவைப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமது கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு கிடைக்காவிடின் நாளைய தினமும் சேவைப்புறக்கணிப்பு தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.