இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ளாரா என வினப்பட்டதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிபிசி உடனான நேர்காணல் ஒன்றிலே அவரிடம் கேட்டதற்கு மஹேல தெரிவித்ததாவது,
“.. இது குறித்து குமார் சங்கக்காரவிடமே கேட்க வேண்டும். எவ்வாறாயினும் அரசியல் குறித்து பெரிதாக முன் அனுபவம் இல்லாததால் அரசியல் குறித்து கதைக்க விரும்பவில்லை..” எனத் தெரிவித்துள்ளார்.