உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சமாளிக்க துடுப்பாட்டக்காரர்கள் சிறந்த பயிற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின், தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அதில் பேசிய சச்சின், பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் இடத்தில் துடுப்பாட்டக்காரகளும் சிறந்து விளங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது சச்சினிடம், மலிங்காவின் அனல் பறக்கும் பந்துவீச்சை எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்கப்பட்டது.
நான் மலிங்காவின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் உள்ள தலையை பார்க்க மாட்டேன். அவர் எங்கு பந்து வீசுகிறார் என்பதையே பார்ப்பேன் என்று சிரித்தபடியே பதிலளித்துள்ளார்